15 வயது சிறுமி துஷ்பிரயோகம்! உடந்தையாக இருந்த சிறுமியின் தாய்!

அம்பாறை, திருக்கோவில் பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரை 7 மாத கர்ப்பிணியாக்கிய ஒரு பிள்ளையின் தந்தை தலைமறைவாகி உள்ளார்.

இச்சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் சகோதரி மற்றும் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

சிறுமியின் சகோதரியின் கணவனான 31 வயதுடைய நபரினாலேயே சிறுமி துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேக நபரே தலைமறைவாகியுள்ளார்.

இது குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சிறுவர் பிரிவு பொலிஸார் விசாரணையினை நடாத்தி, சிறுமியினை வைத்தியசாலையில் சேர்த்தனர்.

அத்தோடு தலைமறைவாகி உள்ள நபரை தேடி கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய உடந்தையாக இருந்த சிறுமியின் 54 வயதுடைய  தாயார் மற்றும் சிறுமியின் 24 வயதுடைய சகோதரி இருவரையும் கைது செய்து அவர்களிற்கு எதிராக பொலிஸர் வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.