கட்டிலுக்கு அடியில் காதலியை ஒரு மாதம் மறைத்து வைத்த 16 வயது காதலன்

ஒரு மாத காலமாக தனது காதலியைப் படுக்கை அறை யில் கட்டிலுக்கு அடியில் ம றைத்து வைத்திருந்த பாட சாலை மாணவன் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் உஹன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தற்போது இருவரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

காதலிக்கு 22 வயது எனவும், மாணவனுக்கு 16 வயது எனவும் தெரியவந்துள்ளது. அம் மாணவனின் பெற்றோர் கடை ஒன்றினை நடத்தி வருகின்றனர் எனவும், அவர்கள் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியேறி இரவு தாமதமாக வருகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.

அதன் காரணமாக பகலில் வீட்டில் யாரும் இல்லாததால், தனது காதலியை இரவு நேரத்தில் கட்டிலுக்கு அடியில் அவர் மறைத்து வைத்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

அறையில் வைத்தே காதலிக்குத் தேவையான உணவை மாணவன் கொடுத்தார் எனவும், ஒரு சந்தர்ப்பத்தில், பகலில் திடீரென வீட்டுக்கு வந்த மாணவனின் தாய், மகனின் காதலியைக் கண்டு பிடித்துள்ளார்.

இச் சம்பவத்தை தந்தையிடம் கூற வேண்டாம் என்று மகன் தயாரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இருவரையும் கைது செய்த பொலிஸார், தமது காவலில் வைத்து விசாரணை முன்னெடுத்து வருகின்றனர். பொலிஸ் விசாரணையின் போதுதான் சம்பவம் தொடர்பில் தந்தைக்குத் தெரியவந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.