மனநலம் குன்றிய 66 வயது மூதாட்டியை வன்புணர்வு செய்த 40வயது நபர்

மன நலம் குன்றிய 66 வயதான மூதாட்டியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 40 வயதான நபர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 09 ஆம் திகதி பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வீட்டுக்கு முன்பாக சென்ற நபர் , வாகன ஹார்னை அடித்து மூதாட்டியை அழைத்துள்ளார். மூதாட்டி வெளியே வந்ததும் அவரை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

சத்தம் கேட்டு வெளியே வந்த மூதாட்டியின் சகோதரியான 70 வயதான மூதாட்டியையும் அடித்து காயமேற்படுத்தி விட்டு அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரு மூதாட்டிகளும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர், சம்பவம் நடந்து 10 நாள்கள் கடந்த நிலையிலும் கைது செய்யப்படவில்லை. அவர் தலைமறைவாகி உள்ளார் எனவும் , அவரை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை , குறித்த நபர் கொலை மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தரவில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.