இலங்கையை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யும் பிரித்தானியா!!!

சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கையை எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் நீக்க உள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.

கொவிட் நோய்த் தொற்று பரவக்கூடிய ஆபத்தான நாடுகளின் வரிசையைக் கொண்ட சிவப்பு பட்டியலில் இலங்கையை கடந்த ஜூன் மாதம் 8 ஆம் திகதி பிரித்தானியா இணைத்துக் கொண்டது.

சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிக்க வேண்டுமாயின் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர் என்றாலும் கொவிட் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட நாடுகளிலிருந்து பயணிப்போர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் எனவும் பிரித்தானியா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.