வவுனியா விபத்தில் ஒருவர் பரிதாபகரமாக பலி!

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி  விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டானிச்சூர் அரச பாடசாலைக்கு அண்டிய பகுதியில் நேற்று (21) மதியம் வான், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி  விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் துரைசாமி லலிதராசா என தெரியவந்துள்ளது. விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.