7 பேர் பலியான தியத்தலாவ கார் விபத்து சம்பவத்தில் இரு சாரதிகள் கைது

தியத்தலாவை – நரியாகந்தை திடலில் இடம்பெற்ற கார் ஓட்டப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து சம்பவம் தொடர்பில் இரு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய குற்றத்தில் இரு சாரதிகளும் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 8 வயதுடைய சிறுமியொருவரும் அடங்குவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அத்துடன், 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மீதமுள்ள ஓட்டப் பந்தயங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் சுமார் 100,000 பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஏப்ரல் 21 தாக்குதல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஃபொகஸ் ஹில் க்ரொஸ் ஓட்டப் பந்தயம் 5 வருடங்களின் பின்னர் இந்த வருடம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.