சபாநாயகரை சந்தித்த ஓரின சேர்க்கை பிரதிநிதிகள் மற்றும் சந்திப்பு

இலங்கை LGBTIQ+ சமூகப் பிரதிநிதிகளின் குழு இலங்கை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை கடந்த திங்கட்கிழமை (12) சந்தித்துள்ளனர்.

இலங்கையின் தண்டனை சட்டத்தின் 365 மற்றும் 365A பிரிவுகளில் திருத்தம் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. டோலவத்தவினால் கொண்டுவரப்பட்ட தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலம் தொடர்பில் சபாநாயகரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இந்த சந்திப்பின் நோக்கமென அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஓரினச்சேர்க்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக LGBTIQ+ சமூக பிரதிநிதிகளும் சபாநாயகரும் நீண்டநேரம் கலந்துரையாடினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.