மூன்று மாணவிகளை உறவு கொள்ள ஆசைப்பட்ட ஆசிரியருக்கு நடந்தது என்ன?

3 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில், ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலையை சேர்ந்த  விஞ்ஞான ஆசிரியர் ஒருவரை இன்று வியாழக்கிழமை (15) கைது செய்ததாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

தரம் 10 இல் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரிலே இவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் 5 வருடங்களாக அப்பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியராக சேவையாற்றும் இந்த ஆசிரியர், மூன்று மாணவிகளிடமும் பாலியல் அழுத்தத்தை பிரயோகித்து குறுஞ்செய்திகள் பலவற்றை அனுப்பியுள்ளார்.

அந்த குறுஞ்செய்திகளுக்கு பாடசாலை மாணவிகள் மூவரும் பதிலளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியர், மாணவிகளின் வகுப்பறைக்குச் சென்று, அந்த மாணவிகள் அமர்ந்திருக்கும் கதிரைகளுக்கு முன்பாக இருக்கும் மேசைகளின் மேல், “என்னுடைய யோசனைக்கு இணக்கமா?” என எழுதியுள்ளார்.

இதனால், மனதளவில் பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரும் வட்டவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அதனடிப்படையிலேயே விஞ்ஞான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் என வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விஞ்ஞான பாட ஆசிரியர் 44 வயதானவர் என்றும், அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார் எனத் தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.