எவர் வரினும் பேசியே முடிவு என்கிறார் சுமந்திரன்!

தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கும் எந்த கட்சியுடனும் இணைந்து பயணிக்க தயாரென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜேவிபியின் மக்கள் சந்திப்பில் சுமந்திரன் பங்கேற்றமை பல விமர்சனத்தை தோற்றுவித்துள்ளது.

தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கிய இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரித்த ஜேவிபியுடன் தமிர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் எசுமந்திரன் கைகோர்க்கிறாரா? எனும் கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சுமந்திரன் ஜேவிபியின் மக்கள் சந்திப்பில் மட்டுமல்லாமல் ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பல கட்சிகளின் கூட்டங்களிலும் அவர்களது அழைப்பின் பேரில் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக செய்யப்பட்டு வரும் எம்.ஏ.சுமந்திரன் இலங்கை தமிழரசு கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு பல்வேறு காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஜேவிபியின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டமை சந்தேகத்தை தோற்றுவித்திருந்தது.

எனினும் எவருடனும் இணைந்து பயணிக்க தயாரில்லை எனவும், அப்படி எந்தவொரு வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை .

மேலும், மக்கள் விடுதலை முன்னணியுடன் மாத்திரமல்ல, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு எவர் முன்வருகின்றபோதிலும் நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.