ஆட்டோவை களவெடுத்த கொள்ளையன், மாணவனின் சைக்கிளில் தப்பியோட்டம் – யாழில் சம்பவம்!

யாழ்ப்பாண நகர் பகுதியில் மச்சக்கர வண்டி ஒன்றினை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்வதற்கு முற்பட்ட போது மாணவன் ஒருவனின் துவசக்கர வண்டியை பறித்துக் கொண்டு தப்பியோடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகில் தனது முச்சக்கர வண்டியினை நிறுத்திவிட்டு வைத்தியசாலைக்கு சென்று திரும்பியபோது தனது முச்சக்கர வண்டி காணாமல் போனதை அடுத்து உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி  குறித்த முச்சக்கர வண்டி யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் பயணித்துகொண்டு இருந்தபோது, அதனை அடையாளம் கண்டு வழிமறித்துள்ளார்.

இதன் போது அந்த நபர் முச்சக்கர வண்டியை கைவிட்டு விட்டு, வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த மாணவனின் துவிச்சக்கர வண்டியை பறித்து தப்பி ஓடியுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.