மட்டக்களப்பில் தண்டவாளத்தில் கிடந்தவர் ரயிலில் அடிபட்டு பலி

மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் நேற்று (18) இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த நடராஜா சிவசுப்ரமணியம் என்ற 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விரைவு ரயிலில் மோதி அவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் இரவு உணவு அருந்திவிட்டு புகையிரத தண்டவாளத்தில் தலையை பிடித்திருந்த நிலையில் குறித்த நபர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ரயிலில் அடிபட்டதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.