வீடு தீ பற்றி மனைவி பலி, உடனடியாக வெளியேறி தனது உயிரை காப்பாற்றிய பாசக்கார கணவன்

வீடு தீ பற்றி மனைவி பலி, உடனடியாக வெளியேறி தனது உயிரை காப்பாற்றிய பாசக்கார கணவன்

(Puttalam News) வீடொன்றில் நேற்று (22) ஏற்பட்ட திடீர் தீ பரவலில் பெண் ஒருவர் எரிந்து  உயிரிழந்ததாகவும், குறித்த பெண்ணின் கணவர் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறி தனது உயிரை காப்பாற்றியதாக புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் ஆராய்ச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிவல்கெல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பெண் ஒருவர் தனது கணவருடன் தென்னை ஓலையால் வேயப்பட்ட சிறு வீட்டில் வசித்து வந்த நிலையில் குறித்த வீடு நேற்று தீப்பற்றியது.

குறித்த சம்பவத்தில் கிரிவல்கெல பகுதியை சேர்ந்த 65 வயது பெண் ஒருவர்  உயிரிழந்தார்.

தீபற்றிய போது குறித்த பெண்ணின் கணவர் உடனடியாக வெளியேறி தனது உயிரை  காப்பாற்றியதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.