ஆட்டை கர்ப்பம் ஆக்கியவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்!

பிரான்ஸில் மறி ஆட்டை பாலியல் பலாத்காரம் செய்த 53 வயதான இலங்கைத் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் குறைந்தது 3 முறையாவது ஆட்டை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

டூர்ஸில் உள்ள ஹொனாரே-டி-பால்சாக் பூங்காவில் வளர்ப்பு ஆடுகளை துஷ்பிரயோகம் செய்தமைக்காக கடந்த 27ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அவர் ஆடுகளை வன்புனர்ந்தது உறுதியாகியுள்ளது. எனினும், 2018ஆம் ஆண்டிலிருந்து குறித்த பூங்காவில் அவர் இக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

ஒரே ஆட்டை 3 முறை பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

முதல் முறையாக ஜனவரி 12 முதல் 13 , பின்னர் மார்ச் 21 முதல் 22 வரை மற்றும் இறுதியாக ஜூன் 29 முதல் 30 வரை இரவுகளில் இந்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டடுள்ள அவர், தியானம் அல்லது யோகா செய்வதற்காக சில நேரங்களில் பூங்காவிற்கு வருவதை ஒப்புக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் குடிபோதையில் இருந்ததால், ஆட்டை பாலியல் பலாத்காரம் செய்தது நினைவில் இல்லை எனவும்  தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 23, 2021 அன்று இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்படவுள்ள நிலையில் அதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.