குழந்தையை விட்டுவிட்டு விக்டோரியா நீர்த்தேக்கத்தில் குளித்த இளம் தம்பதி சடலமாக மீட்பு!

இரண்டு வயது குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அடிவாரத்தில் குளித்த 28 வயதான தில்ஷான் திகன மற்றும் 24 வயதான ஆயிஷா இருவரும் சலலமாக மீட்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் (15) மதிய உணவு சாப்பிட்டுவிட்டு சிறிது ஓய்வெடுத்த இருவரும், கைக்குழந்தையை தூங்க வைத்துவிட்டு வீட்டுக்கு அருகில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் கும்புக்கந்துர ஓயாவில் இறங்க சென்றனர்.

நீர்த்தேக்கத்திற்கு முதலில் சென்ற ஆயிஷா ​​கால் தவறி விழுந்து மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த கணவன் தில்ஷன் மனைவியை காப்பாற்றுவதற்காக நீர்தேக்கத்திற்குள் குதித்துள்ளார்.

ஆயிஷாவைப் பிடித்தவுடன் இருவரும் நீரிற்குள் மூழ்கியுள்ளனர். இருவரையும் காப்பாற்றுவதற்காக அளுத்வத்தையைச் சேர்ந்த ஆனந்தன் என்ற நபர் முன்வந்து நீர்தேக்கத்திற்குள் குதித்து ஒருவரின் சடலத்தை மீட்டுவந்துள்ளார்.

மற்றவரின் சடலத்தை மீட்பதற்காக மீண்டும் நீர்த்தேக்கத்திற்குள் சென்ற அவரும் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அளுத்வத்தை பகுதியை சேர்ந்த ஆனந்தன், மூன்று பிள்ளைகளின் தந்தையான முப்பத்தெட்டு வயதுடையவர்.

நீர்த்தேக்கத்தில் இருந்து மீட்கப்பட்ட மூன்று சடலங்களும் மருத்துவ பரிசோதனைக்காக தெல்தெனிய மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.