சிங்கப்பூர் பொலிஸில் இணைவதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்

சிங்கப்பூர் காவல்துறையில் 200 உதவியாளர் வெற்றிடங்களுக்கு இலங்கையர்களை இணைத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிடங்களுக்கான நேர்முகப் பரீட்சை நேற்று (16) ஆரம்பமானதுடன், இன்று (17) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் அலுவலகத்தில் நேர்முகத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை https://forms.gle/8DzuH5LUooxg4czE6 பூர்த்தி செய்யுமாறும், நேர்முகத் தேர்வுக்கு A Level ரிசல்ட் சீட் மற்றும் IELTS சான்றிதழுடன் பாஸ்போர்ட்டைக் கொண்டு வரமுறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏனைய தகுதிகள்

  • விண்ணப்பதாரர்கள் IELTS இல் 4.5% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
  • 25-35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்ககூடாது
  • விண்ணப்பதாரர்கள் உடலில் பச்சை குத்துதல் அல்லது முடிக்கு வண்ணம் பூசுதல் இல்லாமல் இருக்க வேண்டும்.
  • கூடுதலாக, மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சி பெற வேண்டும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 0112 – 800407 என்ற இலக்கத்திற்கு அழைத்து மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.