ஒற்றையாட்சிக்குள்தான் எந்தத் தீர்வும், 13 பிளஸ் அதுவே என்கின்றார் பசில்

dadaqwfq

13 பிளஸ் யோசனையால் இலங்கையின் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

எல்லைமீறிய அதிகாரப் பகிர்வை எதிர்ப்பீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பசில் ராஜபக்ச இவ்வாறு கூறினார்.

“சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து ஜனாதிபதி தமிழ்க்கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார் எனக் கூறப்படுகின்றது. ஆனால் ஒற்றையாட்சியையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஏற்கின்றது.

13 பிளஸ் என்ற யோசனையை மஹிந்த ராஜபக்சவே முதன் முதலில் முன்வைத்தார். அதன்மூலம் நாட்டின் ஒற்றையாட்சி உறுதிப்படுத்தப்பட்டது. சொல்லளவில் இருந்த ஒற்றையாட்சியை மஹிந்த ராஜபக்சவே நிஜமாக்கினார்.

நாட்டின் தேசியக் கொடியை எங்கு வேண்டுமானாலும் ஏற்றக்கூடிய சூழ்நிலையை உருவாக்கினார். ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள்ளேயே நடவடிக்கை இடம்பெறும். எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.