மனைவியை பலாத்காரம் செய்ய வந்தவரை அடித்து கொலை செய்த தம்பதி

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிம்புரத்தேவ மீன்பிடித் துறைமுகத்தில் கணவன் மனைவியினால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கணவனும் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (18) இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் தனது மனைவியை பலாத்காரம் செய்ய வந்ததாகவும், அதனால் அந்த நபர் அடித்துக் கொல்லப்பட்டதாகவும் தம்பதிகள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

அரலகங்வில, முல்கல, பிம்புரத்தேவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

67 வயதுடைய சந்தேக நபர் மற்றும் கொலையை செய்த 47 வயதுடைய பெண் ஆகியோர் அரலகங்வில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இன்று (19) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த நபரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் துடுப்பு அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.